Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதாரிகள் IS உறுப்பினர்களே…

உயிர்த்த ஞாயிறு தாக்குதாரிகள் IS உறுப்பினர்களே…

by admin

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டவர்கள் சிரியா- ஈராக் நாடுகளில் முன்னர் தீவிரமாக செயற்பாட்டில் ஈடுபட்ட ஐ.எஸ் உறுப்பினர்கள் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரிகொகோவ் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் உவா நகரில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான சர்வதேச கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சிரியா- ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பிற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு, இலங்கை திரும்பிய உள்ளுர் தீவிரவாத குழுவொன்றே குண்டுவெடிப்புகளை திட்டமிட்டது. குறித்த அமைப்பு, வெளிநாடுகளிலுள்ள ஐ.எஸ் கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டே தொடர் குண்டுத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் சிரியா- ஈராக்கிற்கு வருகை தருமாறு ஏனைய நாடுகளிலுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த அவ்வமைப்பு தற்போது அவர்கள் ; தங்கியிருக்கும் நாடுகளிலேயே தாக்குதலை நடத்துமாறு லியுறுத்தி உள்ளது எனவும் இந்த செயற்பாடுகளினால் ஐரோப்பிய நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். #குண்டுத்தாக்குதல் #உயிர்த்தஞாயிறு #சிரியா #ஈராக் #ஐஎஸ் #ரஸ்யா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More