Home இலங்கை ரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை

ரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை

by admin


முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை என இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகி சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரிஷாத் தன்னுடன் மிகவும் சிறந்த முறையில் உரையாடியதாகவும், அது ஒரு போதும் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக அமையவில்லை எனவும் பொதுவாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தன்னுடன் தொலைபேசியில் உரையாடுவது போன்ற ஒரு உரையாடலே இடம்பெற்றதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். #ரிஷாத் பதியுதீன்  #அழுத்தங்களும் #மகேஷ் சேனாநாயக்க #உயிர்த்த ஞாயிறு #eastersundaylk

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More