Home இந்தியா மும்பையில் தொடரும் கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு….

மும்பையில் தொடரும் கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு….

by admin

மும்பையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

5-ஆவது நாளாக நேற்றும் மழை நீடித்ததனால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் கடலோர படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை கிழக்கு மலாட்டின் குடிசை பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாகினர். இந்த இடிபாடுகளில், குடும்பத்தினரை இழந்த பிரியா எனும் 8 வயதுடைய சிறுமி, சிறிய காயத்துடன் பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More