Home உலகம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக, தலாய் லாமா மன்னிப்புக் கோரினார்….

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக, தலாய் லாமா மன்னிப்புக் கோரினார்….

by admin

தன்னுடைய இடத்துக்கு எதிர்காலத்தில் வரவுள்ள பெண் தலாய் லாமா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக திபெத்திய ஆன்மிக தலைவ் தலாய் லாமா மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த மாதம் பிபிசி செய்திச் சேவைக்கு நேர்காணல் வழங்கிய தலாய் லாமா, எதிர்காலத்தில் வரக்கூடிய பெண் தலாய் லாமா ஈர்ப்பு மிக்கவராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து பல விமர்சனங்களுக்குள்ளாகியிருந்த நிலையில் இவ்வாறு மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது.

தலாய் லாமா நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது அலுவலகம் அவர் கூறிய இந்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் இந்த கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது.

தலாய் லாமா தனது வாழ்க்கை முழுவதும், பெண்களை பொருட்களாக சித்தரிப்பதை எதிர்த்தும், பாலின சமத்துவத்தை ஆதரித்தும் வந்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More