Home சினிமா மனிதர்களிடம் உதவும் குணம் குறைந்து வருகின்றது

மனிதர்களிடம் உதவும் குணம் குறைந்து வருகின்றது

by admin


மற்றவர்களுக்கு உதவும் குணம் மக்களிடம் குறைந்து வருவதாக நடிகர் வடிவேலு, வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள கலியாந்தூரில் அதிகமுடைய அய்யனார் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. 5 புரவிகளை கிராம மக்கள் ஊர்வலமாக சுமந்து வந்து அய்யனார் கோவிலில் வைத்து சிறப்பு பூசைகள் செய்தனர்.விழாவில் நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பங்கேற்ற அவர், வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய வடிவேலு,
ஐய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், தண்ணீர் பிரச்சினை எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும். கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய உலகில் மற்றவர்களுக்கு உதவும் குணம் மனிதர்களிடம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் ஓரிடத்திற்கு வந்தால் தங்க வைத்து தண்ணீர் தருவார்கள். இன்று தனியாக இருந்தால் கழுத்தை அறுத்து விடுகின்றனர்.

சாலையில் மயங்கி கிடப்பவனுக்கு தண்ணீர் கொடுத்து அனுப்புவார்கள். தற்போது அவனது உடமைகள் பறிபோய் விடுகிறது என வேதனை என்று தெரிவித்தார். #மனிதர்களிடம்  #உதவும் குணம் #வடிவேலு , #திருவிழா #தண்ணீர் பிரச்சினை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More