Home பிரதான செய்திகள் அவுஸ்திரேலிய வீரருக்கு 45 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம்

அவுஸ்திரேலிய வீரருக்கு 45 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம்

by admin

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமைக்காக அவுஸ்திரேலிய வீரர் பெர்னாட் டொமிக்கு 45 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோ-விபிரைட்டை எதிர்கொண்ட பெர்னாட் டொமிக் 2-6, 1-6, 4-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்திருந்தார்.

அவர் கடந்த காலத்தை போன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என நடுவர்கள் தெரிவித்ததனையடுத்து அனுபவம் இல்லாத வீரருக்கு எதிராக 58 நிமிடத்திலேயே தோல்வியடைந்த அவருக்கு போட்டியின் வருமானத்தில் இருந்து 45 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More