Home இலங்கை பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி…

பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி…

by admin


நாரஹன்பிட்டிய காவற்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை தலைமையகத்தில் மின்தூக்கி செயற்பாட்டாளராக இருந்த காவற்துறை காண்ஸ்டபிள் ஒருவருக்கு 2017ம் ஆண்டு திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது.  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமை காரணமாக கைது செய்யப்பட்டுள்ள காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தற்போது நாரஹன்பிட்டிய காவற்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். #பூஜித் ஜயசுந்தர #காவற்துறைமருத்துவமனை #புலனாய்வுத்திணைக்களம் #நீதிமன்றம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More