Home இலங்கை கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கமே அதிக சுதந்திரத்தை வழங்கியுள்ளது…

கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கமே அதிக சுதந்திரத்தை வழங்கியுள்ளது…

by admin

யார் எவ்வாறு விமர்சித்தாலும், கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் அதிக சுதந்திரத்தை வழங்கியுள்ளதென, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அழுத்தம், அச்சுறுத்தல் இன்றி வெகுசன ஊடகங்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, அரசாங்கம் என்ற ரீதியில் தாம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற கடத்தல், தாக்குதல், வௌ்ளை வான், ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் போன்ற எந்தவொரு சம்பவங்களும் கடந்த 4 வருடங்களில் இடம்பெறவில்லை என்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார். #ருவன்விஜேவர்தன

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More