Home இலங்கை யாழ் ஈச்சமோட்டையில் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஐவர் கைது

யாழ் ஈச்சமோட்டையில் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஐவர் கைது

by admin

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் உள்பட 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் நேற்று (ஜூலை 8) திங்கட்கிழமை காவற்துறையினர் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களில் ஒருவர் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழ் உத்தியோகத்தர் என விசாரணைகளில் தெரியவந்தது என காவற்துறையினர் தெரிவித்தனர். #ஈச்சமோட்டை #ஹெரோயின் #போதைப்பொருள்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More