Home இலங்கை கார் – மோட்டார் சைக்கிள் விபத்து – இருவர் பலத்த காயம்

கார் – மோட்டார் சைக்கிள் விபத்து – இருவர் பலத்த காயம்

by admin


திம்புள்ள பத்தனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்கப் பகுதியில் நேற்று (16.07.2019 )மாலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹட்டன் – நுவரெலியா ஏ-7 பிரதான வீதியில் நுவரெலியா பகுதியிலிருந்து அவிசாவளை பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து பதுளை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சாரதி மோட்டர் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள திம்புள்ள பத்தனை காவல்துறையினா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #கார்  #மோட்டார் சைக்கிள் #விபத்து #காயம்
(க.கிஷாந்தன்)

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More