Home இலங்கை பிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு….

பிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு….

by admin

இலங்கையின் உடவளவை தேசிய வனத்தை பார்வையிட வந்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவர் பயணித்த சபாரி வாகனத்தின் மீது, மிருக வேட்டையில் ஈடுபடும் சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

தமது 12 வயது குழந்தையுடன்;, பிரான்ஸைச் சேர்ந்த தம்பதியினர், உடவளவ வனத்தைப் பார்வையிட்டதுடன் கல்அமுன வனத்தில் ஓய்வெடுத்த போது, மிருக வேட்டையில் ஈடுபட்ட மூவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதன்பின்னர், அவர்கள் வனத்திலிருந்து வாகனம் மூலம் வெளியேறும் போது, குறித்த வேட்டைக்காரர்கள் அவர்களிடம் அநாகரிகமாக நடந்துக்கொண்டுள்ளனர். இதற்கு வாகனத்தின் சாரதி எதிர்ப்பை தெரிவித்தப் போது, வேட்டைகாரர்கள் அவர்களிடம் இருந்த துப்பாக்கியால் வாகனத்தை நோக்கிச் சுட்டதனால் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில், அம்பேகமுவ காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More