Home இலங்கை மன்னாரில், புத்தக மொத்த விற்பனை நிலையம்  தீயினால் சாம்பலானது…

மன்னாரில், புத்தக மொத்த விற்பனை நிலையம்  தீயினால் சாம்பலானது…

by admin

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக மொத்த விற்பனை நிலையம் ஒன்று இன்று வியாழக்கிழமை (25) காலை 5 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த விற்பனை நிலையம் முழுமையாக எரிந்து சாம்பளாகியுள்ளது. சுமார் 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

வழமை போல் நேற்று புதன் கிழமை (24) இரவு குறித்த விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 5 மணியளவில் மூடப்பட்டிருந்த குறித்த விற்பனை நிலையத்தினுள் இருந்து தீ மற்றும் புகை வெளி வருவதை அவதானித்தவர்கள் உடனடியாக குறித்த விற்பனை நிலைய உரிமையாளருக்கு தகவல் வழங்கினர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தீயை அனைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மன்னார் காவற்துறையினருக்கும், மன்னார் நகர சபைக்கும் தெரியப்படுத்தினர். இந்த நிலையில் மன்னார் நகர சபை மற்றும் இராணுவத்தினர் பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வந்து தீயை அனைக்க நடவக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.எனினும் குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களுமே எரிந்து சாம்பலாகி உள்ளன.

தீ அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பரவாத வகையில் தீ முழுமையாக அனைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற  காவற்துறையினர்  மின் ஒழுக்கா?அல்லது திட்டமிட்ட சதியாக என்பது தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More