Home இலங்கை வைத்தியர் ஷாபி பிணையில் விடுதலை :

வைத்தியர் ஷாபி பிணையில் விடுதலை :

by admin


குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான வைத்தியராக கடமையாற்றி வந்த இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேகரித்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நீதிவான் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

இதேவேளை வைத்தியர் ஷாபியின் வழக்கு விசாரணைக்கு முன்னதாக குருணாகல் மக்களினால் போராட்டம் ஒன்று இன்று (25) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதுடன் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தi8மயும் குறிப்பிடத்தக்கது  #வைத்தியர்  #ஷாபி #பிணை #விடுதலை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More