Home இலங்கை உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்தவர் கைது

உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்தவர் கைது

by admin


நிறைபோதையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு , நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

உரும்பிராயை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக மனைவி , பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். குறித்த நபரின் மனைவி வன்னி பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் இரண்டு பிள்ளைகள் சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வருகின்றனர்.

அந்நிலையில் மனைவி , பிள்ளைகளை தன்னால் பார்க்க முடியாது விரக்தியில் வாழ்ந்து வந்ததனால் தனது உயிரை மாய்க்கவே கொடிகாமம் பகுதிக்கு வந்து மது அருந்தி விட்டு தண்டவாளத்தில் படுத்திருந்தேன் என விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து குறித்த நபரை காவல்துறையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய போது , நீதிவான் குறித்த நபரை சொந்த பிணையில் செல்ல அனுமதித்ததுடன் , அடுத்த மாதம் 30ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார். #உயிரை  #மாய்த்து #தண்டவாளத்தில் #கைது #போதை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More