Home இலங்கை தெரிவுக்குழு முன்னிலையில் இன்று  மீண்டும் இராணுவத் தளபதி – பாதுகாப்பு செயலாளர்  முன்னிலை

தெரிவுக்குழு முன்னிலையில் இன்று  மீண்டும் இராணுவத் தளபதி – பாதுகாப்பு செயலாளர்  முன்னிலை

by admin

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைதியரத்ன ஆகிய இருவரும் மீண்டும் முன்னிலையாகவுள்ளனர்

உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அடுத்த மாத இறுதிக்குள் தமது விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவந்து அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் எடுத்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் விசேட தெரிவுக்குழு கூடுகின்ற நிலையில் இவ்வாறு விசாரணைகளுக்காக இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருவரும் தமது வாக்குமூலங்களை வழங்கியிருந்த நிலையில் இன்று மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இNதுவேளை எதிர்வரும் ஆறாம் திகதி தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன உள்ளிட்ட சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  #தெரிவுக்குழு  #இராணுவத் தளபதி #பாதுகாப்பு செயலாளர்  #மகேஷ் சேனாநாயக்க  #கபில வைதியரத்ன

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More