Home உலகம் பிலிப்பைன்ஸில்; இரு படகுகள் கவிழ்ந்து விபத்து – 31 பேர் பலி

பிலிப்பைன்ஸில்; இரு படகுகள் கவிழ்ந்து விபத்து – 31 பேர் பலி

by admin


பிலிப்பைன்ஸ் நாட்டில் கடல் பயணத்தின்போது சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையில் சிக்கிய இரு படகுகள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.  அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்பதனால் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கடல் மார்க்கமாக படகுகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும் இந்த எச்சரிக்கையையும் மீறி குய்மாரஸ் மற்றும் ஈவோய்லோ மாகாணங்களுக்கு இடையில் கடல்வழியாக பயணிகளை ஏற்றிச்சென்ற இரு படகுகளே நேற்று முன்தினம் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன.

தகவலறிந்து சென்ற கடலோரக் காவல் படையினர் 62 பயணிகளை மீட்டதுடன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 31 பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.   #பிலிப்பைன்ஸ்   #படகுகள்  #விபத்து #பலி #philipines

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More