Home இலங்கை திருமண   வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து கொள்ளை

திருமண   வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து கொள்ளை

by admin

யாழில் இடம்பெற்ற திருமண விழாவின் வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து மணமகளின் தாலி உட்பட வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த உறவினர்கள் அனைவரினதும் 60 பவுண் தங்க நகைகளை வீட்டினுள் புகுந்த கொள்ளைக்கும்பல் நேற்றைய தினம் (29) அதிகாலை கொள்ளையடித்து சென்றதுடன் , இருவர் மீது வாள் வீச்சினை மேற்கொண்டு தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

இச் சம்பவம் நவாலி கொத்துக்கட்டி வீதி நவாலி தெற்கில் இடம்பெற்றது. அதிகாலை 1.30 மணியளவில் 5 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் வீட்டின் முன்வாயில் வழியாகவும் சமையல் அறையின் மேற்பகுதி வழியாகவும் வீட்டுக்குள் நுழைந்தது.

வீட்டில் இருந்த பெரிய தந்தை வழிமுறையான ஒருவரைக் கட்டிவைத்துவிட்டு நடைபெற்ற திருமண நிகழ்வின் வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து அதில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை தருமாறு குறித்த குழு கத்தி முனையில் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியது.

கும்பலின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாததால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது குறித்த கும்பல் வாளால் வெட்டியதுடன் தாக்குதலையும் நடத்தியது. நிலைமையை உணராத பெண்ணொருவர் சகல நகைகளையும்எடுத்து தருவதாககூறிய நிலையில் குறித்த கும்பல் ஒவ்வொரு இடமாகத் தேடி அனைத்து நகைகளையும் பெற்றுக்கொண்டனர்.

குறித்த கும்பலின் செயற்பாடு தொடர்பில் திருமண வீட்டின் மணமகளால் கைத்தொலைபேசி மூலம் குறுந்தகல் (SMS) மூலம் தெரியப்படுத்தியதன் பயனாக அயல்வீ்டுக்காரர் ஒருவர் ஏனையவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அறிந்த கொள்ளைக்கும்பல் வெளியில் நின்ற அயல்வீட்டுக்கார நபரை வெட்டிக்காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.

இச்சம்பவத்தில் குறித்த வீட்டில் இருந்தவர்களின் 60 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் கடவுச் சீட்டுக்களும் கைப்பைகளும கொள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு தகல் வழங்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #திருமண  #வீடியோ #கொள்ளை

-மயூரப்பிரியன்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More