Home உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – குறைந்தது ஐந்து பேர் பலி – பலர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – குறைந்தது ஐந்து பேர் பலி – பலர் காயம்

by admin


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சில இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அம்மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக டெக்சாஸ் மாகாண காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இதில் காவல்துறையினரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெக்சாஸின் மேற்குப்பகுதியிலுள்ள ஒடெஸ்ஸா மற்றும் மிட்லாண்ட் ஆகிய பகுதிகளில் வாகனத்தை இயக்கிக்கொண்டே துப்பாக்கிதாரி இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. உள்ளுர் நேரப்படி நேற்று சனிக்கிழமை முற்பகலில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 4-ம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் கடைத்தொகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  #அமெரிக்கா #துப்பாக்கிச் சூடு #டெக்சாஸ்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More