Home இலங்கை ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் துமிந்த முன்னிலையாகவுள்ளார்…

ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் துமிந்த முன்னிலையாகவுள்ளார்…

by admin


முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாக உள்ளார்.

முற்பகல் 11.00 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு துமிந்த திஸாநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  துமிந்த திஸாநாயக்க விவசாயத்துறை அமைச்சராக செயற்பட்ட காலத்தில் விவசாயத்துறை அமைச்சை ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கட்டிடம் ஒன்றில் நடாத்திச் சென்றமை தொடர்பிலான முறைப்பாடு குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்வதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை எதிர்வரும் 11ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More