Home இலங்கை கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைகட்டடம்

கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைகட்டடம்

by admin

 

ஜனாதிபதி செயலகததின் நிதியில் கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைகட்டடம் இன்று வடமாகாண ஆளுநரினால் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் 7 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடம் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் பொறியியல் பிரிவின் பங்களிப்புடன் நிர்மானிக்கப்பட்டது.

குறித்த கட்டடத்தினை இன்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் திறந்து மாணவர்களின் பாவனைக்கு கையளித்தார். குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்குாவன், கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  #கிளிநொச்சி  #வகுப்பறைகட்டடம் #சுரேன் ராகவன்

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More