Home உலகம் ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து – 30 பேர் பலி

ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து – 30 பேர் பலி

by admin


ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்க – சாட் நாட்டின் மத்திய பகுதியில் லிபியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள டிபெஸ்டி பிராந்தியத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குத் தங்கம் மிகுதியாகக் கிடைப்பதால் பல்வேறு குழுக்கள் சட்டவிரோதமாகச் சுரங்கம் அமைத்துத் தங்கத்தை எடுத்து வெளிச்சந்தைகளில் விற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், அங்குள்ள கொவ்ரி பவ்டி நகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தங்கச் சுரங்கத்தில் அதிகளவான தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு எதிர்பாராத விதமாகச் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது

இதில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக்கொண்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர் 30 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

மேலும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் கருதப்படுகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.  #ஆபிரிக்கா  #தங்கச்சுரங்கம் #இடிந்து  #விபத்து

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More