Home இலங்கை மானிப்பாய் தனு ரொக் கைது

மானிப்பாய் தனு ரொக் கைது

by admin

மயூரப்பிரியன்

மானிப்பாயில் தனு ரொக் என்ற இளைஞனின் வீட்டை சிறப்பு அதிரடிப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து பெருமெடுப்பில் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர்.

மானிப்பாய் லோட்டன் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் (06) அதிகாலையில் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.

அதிகாலை 5.45 மணியளவில் பேருந்து ஒன்றில் வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினரும் காவல்துறையினரும் அந்த வீட்டை சுற்றிவளைத்து அங்கு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அந்த வீட்டில் தாயாரும் மகளும் மகனும் இருந்ததனர். குடும்பத்தலைவர் கொழும்புக்கு சென்றிருந்ததாகவும் தெரிய வருகின்றது.

பெண் காவல்துறையினரும் குறித்த சுற்றிவளைப்புக்கு சென்றிருந்தனர். அவர்களால் வீட்டில் இருந்த பெண்கள் உடற்சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடத்திய அதிரடிப்படையினரால் வீட்டு வளவிலிருந்ததாக தெரிவித்து 03 துருப்பிடித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து அந்த வீட்டிலிருந்த இளைஞன் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் அதிரடிப்படையினரால் மானிப்பாய் காவல்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த இளைஞர் மீது வன்மமான முறையில் பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இவ்வாறு 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பல வழக்குகளில் இளைஞர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தால் காவல்துறையினர் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட முரணான வகையில் இளைஞர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக இதற்கு முன்னரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #மானிப்பாய் #தனுரொக் #கைது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More