Home இலங்கை வழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது

வழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது

by admin

மயூரப்பிரியன்

யாழில் இடம்பெற்ற பல கொள்ளை , வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் காவல்துறையினரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைக்குண்டுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் நீண்டகாலமாக தேடி வந்துள்ளனர்.

குறித்த நபர் இராசாவின் தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் மறைந்திருக்கின்றார் என யாழ்ப்பாண காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேக நபரை கைது செய்யும் போது அவரது உடமையில் இருந்து கைக்குண்டு ஒன்றினையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை காவல்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #கொள்ளை #வழிப்பறி #கைக்குண்டு #கைது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More