Home இலங்கை “தமிழ் கட்சிகளின் 13அம்ச கோரிக்கைகளை ஏற்க மாட்டேன்”

“தமிழ் கட்சிகளின் 13அம்ச கோரிக்கைகளை ஏற்க மாட்டேன்”

by admin

ஐந்து தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ தன்னிடம் தெரிவித்தார் என, நல்லை ஆதின குரு முதல்வர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று தேர்தல் பிரசாரத்துக்காக சென்றிருந்த   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கடசியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ  நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றதுடன் அவருடன் கலந்துரையாடலில் ஈடுபடடார்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குரு முதல்வர்,

“நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் சார்பாக களமிறங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ஸ  தான் வெற்றியடைந்தால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக என்னிடம் உறுதியளித்துள்ளார். குறிப்பாக அரசியல் கைதிகளை சட்ட ரீதியாக விடுவிக்க முடியும் அதன் ஊடாக அவர்களை விடுவிப்போம்” என்று கூறியுள்ளார்.

“மேலும் வடக்கில் அபிவிருத்திகள் ஊடாக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் எனவும், புதிய பாரிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதிகளவான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும். .வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்தார். அத்துடன் 5 தமிழ் தேசியக் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் என்னிடம் கூறினார். அப்போது நான், தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரை சந்தித்து நீங்கள் பேச வேண்டும் என்பதை கோரினேன் அத்துடன், இது தமிழ் மக்களின் விருப்பமும் அதுவாகவே இருக்கின்றது. மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர் என்று நான் கூறியிருந்தேன்”  எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More