Home உலகம் தாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு

தாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு

by admin

தாய்லாந்தில் நீதிமன்றுக்குள் இடம்பெற்ற நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  தாய்லாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள சாந்தபுரி மாகாணத்தில் தலைமை காவல்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற 67 வயதான தானின் சந்திராதிப் என்பவருக்கு அங்கு 1,500 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக நிலம் உள்ளது.
இந்த நிலத்தின் ஒரு பகுதி தனக்கு சொந்தமானது என தெரிவித்து அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மாகாண நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் அது தொடர்பான விசாரணை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தானின் சந்திராதிப் மற்றும் வழக்கினை தொடர்ந்தவரும் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் நீதிமன்றுக்கு வந்திருந்தார்.

 இதன்போது இருதரப்பினருக்குமிரைடயில் நில பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதனால் ஆத்திரம் அடைந்த தானின் சந்திராதிப் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, எதிர்தரப்பினரை சரமாரியாக சுட்டதில் வழக்கு தொடர்ந்த நபர் மற்றும் அவரது வக்கீல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்;. அத்துடன் துப்பாக்கிச்சத்தம கேட்டு நீதிமன்றுக்குள் காவல்துறையினர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் .  #தாய்லாந்தில் #நீதிமன்று #துப்பாக்கிசூடு  #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More