Home இந்தியா ரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை

ரொபர்ட் பயசும் பரோலில் விடுதலை

by admin

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் ரொபர்ட் பயசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரொபர்ட் பயஸ் உட்பட 7 பேரும் சிறையில் உள்ளனர்.

இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ரத்து செய்த நிலையில் அவர்கள் தமது விடுதலைக்காக போராடி வருகிறார்கள்.  இந்தநிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தினை காரணம் காட்டி தற்போது 1 மாதம் பரோலில் விடுதலை ஆகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரொபர்ட் பயசும் 1 மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார். அவரின் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் பரோல் கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நளினி மற்றும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள், விதிகள் எல்லாம் ரொபர்ட் பயசுக்கும் பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம்; உத்தரவு பிறப்பித்துள்ளது. #ரொபர்ட்பயஸ்  #பரோல்  #விடுதலை #ராஜீவ்காந்தி  #நளினி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More