Home உலகம் புர்கினோ பாசோவில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு

புர்கினோ பாசோவில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு

by admin


ஆபிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள புர்கினோ பாசோ நாட்டில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஐ.எஸ் , அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதனால் ராணுவமும் காவல்துறையினரும் ; தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆலயத்தில் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதுடன் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கியதில் இவ் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் புர்கினோ பாசோ நாட்டின் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #புர்கினோபாசோ  #தேவாலயம்  #தாக்குதல்  #உயிரிழப்பு  #burkinafaso

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More