Home உலகம் படகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி

படகு கவிழ்ந்து விபத்து – 58 அகதிகள் பலி

by admin

மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணம் செய்த 58 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் சுமார் 150 அகதிகளை ஏற்றிக்கொண்டு ஸ்பெயின் நோக்கி புறப்பட்ட படகு பல நாட்கள் இடைவிடாத பயணத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் மவுரித்தானியா நாட்டின் நுவாதிபவ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கிய நிலையில் மவுரித்தானியா நாட்டு கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 58 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 74 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளதுடன் 18 பேரை காணவிலலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் மகிவும் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக பாதுகாப்பற்ற மற்றும் அபாயகரமான முறையில் இவ்வாறு மேற்கொள்ளும் படகு பயணங்கள் பெரும்பாலும் பெரிய விபத்தில் முடிந்து விடுகின’றமை குறிப்பிடத்தக்கது   #படகு  #விபத்து  #அகதிகள்  #பலி  #காம்பியா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More