Home இலங்கை முல்லைத்தீவில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்புப் பேரணி…..

முல்லைத்தீவில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்புப் பேரணி…..

by admin

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10.12.19) முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1008 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கம், சர்வதேசத்துக்கு உடனடியாக பதில் கூற வேண்டும் எனக் கோரி இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ராஜப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்தக் கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று நிறைவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கான மகஜரை ஐக்கிய நாடுகள் சபைக்கான அலுவலகத்துக்குக் கொண்டு சென்று கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More