Home இலங்கை யாழ் விமானநிலையம் குறித்து விசாரணை – அமைச்சரவையில் தீர்மானம்

யாழ் விமானநிலையம் குறித்து விசாரணை – அமைச்சரவையில் தீர்மானம்

by admin

கடந்த ஆட்சி காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடம் இருந்து பெருந் தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று(02.01.2020) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிலையில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ; மேற்படி விடயம் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

குறித்த அமைச்சரவை கூட்டத்தில், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி ஆறாயிரம் ரூபாயாக இருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிராயிரம் ரூபாய் அறிவிடப்படுகின்றமையை யாழ்ப்பாண மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓரவஞ்சனையாகவே நோக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும், அடிப்படை வசதிகள்கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் தேர்தலை நோக்கமாக கொண்டு யாழ்ப்பாண விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்றபோது குறைந்த பறப்பு தூரத்தைக் கொண்ட சென்னைக்கான பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது.

அதேபோன்று, ஜேர்மனி அரசாங்கத்தின்; அனுசரணையில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஜேர்மன் ரெக் எனப்படும் ஜேர்மனி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிலவிவருகின்ற குறைபாடுகள் தொடர்பான விடயங்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்றைய தினம் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அது தொடர்பாகவும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நிறுவனம் சிறப்பாக செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவை தொடர்பிலும் விசாணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தகக்கது.  #யாழ்விமானநிலையம்  #விசாரணை #அமைச்சரவை

ஊடகப் பிரிவு: கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More