Home இலங்கை தொண்டமனாறில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு

தொண்டமனாறில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு

by admin

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே சடலமாக மீத்கப்பட்டவராவர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

நண்பர்களுடன் தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே அவர் சுழியில் அகப்பட்டு நீரில் அடித்து செல்லப்பட்டார். நீரில் அடித்து செல்லப்பட்டவரை காவல்துறையினர் பொதுமக்கள் இணைந்து தேடுதலை முன்னெடுத்த போது , அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   #தொண்டமனாறு  #இளைஞன்  #மீட்பு #புலோலி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More