Home உலகம் லிபியாவில் ராணுவ பாடசாலை மீது வான்வெளி தாக்குதல் – 28 பேர் பலி

லிபியாவில் ராணுவ பாடசாலை மீது வான்வெளி தாக்குதல் – 28 பேர் பலி

by admin

லிபியா தலைநகர் திரிபோலி அருகே உள்ள ராணுவ பாடசாலை மீது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். லிபியாவில் ஆட்சியில் இருந்த கடாபி, 2011-ம் ஆண்டு கொல்லப்பட்டதிலிருந்து அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதுடன் பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதனையடுத்து அரசுப்படை வசமுள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். மேலும்50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

இந்நிலையில், லிபியா தலைநகர் திரிபோலியின் காட்ரா பகுதியில் அமைந்துள்ள ராணுவ பாடசாலை மீது நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   #லிபியா #ராணுவ #பாடசாலை #வான்வெளிதாக்குதல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More