Home இலங்கை தியகல பகுதியில் வான் விபத்து – 5 பேர் படுகாயம்

தியகல பகுதியில் வான் விபத்து – 5 பேர் படுகாயம்

by admin

(க.கிஷாந்தன்)

வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை தியகல – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் தியகல பகுதியில் இன்று (10.01.2020)காலை 8.30 மணியளவில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 5 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை காவல்துறையினர்; தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு ; வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கம்பளை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த வட்டவளை காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  #விபத்து  #தியகல

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More