Home இலங்கை கொட்டடியில் வாள் வெட்டுக்குழு தாக்குதல், இருவர் வைத்திய சாலையில்….

கொட்டடியில் வாள் வெட்டுக்குழு தாக்குதல், இருவர் வைத்திய சாலையில்….

by admin

யாழ்.நகர் பகுதியை அண்டிய கொட்டடி பகுதியில் வாள் வெட்டுக்குழு தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தைப்பொங்கல் தினமான நேற்றைய தினம் புதன்கிழமை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஏழு பேர் அடங்கிய வாள் வெட்டுக்குழு ஒன்று கொட்டடி வைரவர் கோவிலடியில் நின்ற இளைஞர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். அதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர்.

சம்பவத்தை அவதானித்த ஊரவர்கள் வன்முறை கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட போது, அவர்கள் தாம் வந்த மூன்று மோட்டார் சைக்கிளையும் சம்பவ இடத்தில் கைவிட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

அதனால் ஆத்திரமுற்ற ஊரவர்கள் வன்முறை கும்பலின் மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதமாக்கினார்கள். குறித்த வாள் வெட்டுக்குழு பொம்மை வெளி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை தம்மால் அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும் ஊரவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்.காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , ஊரவர்களால் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் காவற்துறை  நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

மோட்டார் சைக்கிளின் இலக்க தகடின் அடிப்படையில் உரிமையாளரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More