Home இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து…

ஊர்காவற்துறை நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து…

by admin

உரிய சுகாதார விதிமுறைகளை பேண தவறிய யூஸ் உற்பத்தியாளருக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஊர்காவற்துறை நகர் பகுதியில் அனுமதியற்ற விதத்தில் உரிய வெப்ப நிலையின்றி மூடிய வடி ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 400 யூஸ் பைக்கற்றுக்களை ஊர்காவற்றுறை பொது சுகாதார பரிசோதகர் இ.ஜெயகதாசன் மற்றும் காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் ம. ஜெயதீப் ஆகியோர் இணைந்து கைப்பற்றி அதனை நீதிமன்றில் ஒப்படைத்து உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , உரிமையாளர் மன்றில் சமூகம் அளிக்காத காரணத்தால் மன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

மன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம் , பொலிசாரினால் கைது செய்யப்பட்ட உரிமையாளர் கடந்த 16 ஆம் திகதி மன்றில் முற்படுத்தப்பட்ட வேளை எதிராளி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து மன்றினால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் அவருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More