Home இலங்கை பங்களாதேஸில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை

பங்களாதேஸில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை

by admin

பங்களாதேஸ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் அவர்கள் பயணம் செய்த நான்கு படகுகளையும் விடுவித்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் எல்லை தாண்டி பங்களாதேஸ் கடல் பரப்பினுள் நுழைந்த நிலையில்; இலங்கை மீனவர்களின் 4 மீன்பிடிப் படகுகள் பங்களாதேஸ் கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் மற்றும் படகுகளின் உரிமையாளர்கள் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(19.02.2020) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் உடனடியாக கொழும்பில் உள்ள பங்களாதேஸ்; உயர் ஸ்தானிகருடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் குறித்த மீனவர்களை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடடிவடிக்கை தொடர்பாக கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்;ந்து குறித்த மீனவர்களின் விடுதலைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தங்களது திருப்தியை வெளியிட்ட கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் படகுகளின் உரிமையாளர்கள் அடங்கிய குழுவினர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து நம்பிக்கையுடன் விடைபெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்;தக்கது. #பங்களாதேஸ் , #கைது  #மீனவர்கள் #விடுதலை #டக்ளஸ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More