Home இந்தியா திருப்பூரில் கோரவிபத்து – 20 பேர் பலி – 22 பேர் படுகாயம்

திருப்பூரில் கோரவிபத்து – 20 பேர் பலி – 22 பேர் படுகாயம்

by admin


திருப்பூரில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெங்களூருவிலிருந்து எர்ணாகுளம் நோக்கி புறப்பட்டுச் சென்ற கேரள அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்றும் கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

இன்று அதிகாலை வேளை வேகமாக சென்ற பாரவூர்தி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கேரள பேருந்து மீது மோதி ஏற்பட்ட விபத்தில் பேருந்து முற்றிலுமாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காயமடைந்தவர்கள் கோவை மற்றும் அவிநாசி பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  #திருப்பூர்   #விபத்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More