Home இலங்கை வவுனியாவில் பாரிய விபத்து: நால்வர் பலி – 20 பேர் காயம் – வாகனங்கள் தீக்கிரை…

வவுனியாவில் பாரிய விபத்து: நால்வர் பலி – 20 பேர் காயம் – வாகனங்கள் தீக்கிரை…

by admin

வவுனியா – பன்றிக்கெய்தகுளம் பகுதியில், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில், நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து  ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானும் நேருக்கு நேர் மோதுண்டே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பிரதேசத்தில் ஏற்பட்ட பதட்டத்தில் பேருந்தும் வானும் சிலரால் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும், இதில் வானுக்குள் இருந்த சாரதியும் வானுடன் எரிவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓமந்தைக் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More