Home இலங்கை நல்லுாா் கந்தன் ஆலயத்தின், நான்கு வீதிகளிலும் பாரிய அலங்கார வளைவுகள்…

நல்லுாா் கந்தன் ஆலயத்தின், நான்கு வீதிகளிலும் பாரிய அலங்கார வளைவுகள்…

by admin

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாரிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.

நல்லூா் கந்தன் ஆலயத்தின் கிழக்கு திசையில் பருத்தித்துறை வீதியிலும், மேற்குத் திசையில் பருத்தித்துறை வீதி மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சந்திக்கும் இடத்திற்கும் அண்மையில் அமைக்கப்படும். அதேநேரம் வடக்கு, தெற்கு திசைகளிலும் இரு திசைகளிலுமாக நான்கு வளைவுகள் அமைப்பதற்கான அனுமதிகோரி மாநகர சபைக்கு கிடைத்த விண்ணப்பம் தொடர்பில் சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தன் ஆலயத்தின் புனிதத்தினையும் மரபையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் அமைக்க எண்ணும் குறித்த வளைவிற்கு எந்தவிதமான நிபந்தனையும். இன்றி அனுமதிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் கருத்துரைத்த உறுப்பினர்கள் குறித்த வளைவு அமைக்க அனுமதிக்க முடியும் அதேநேரம் முடிந்தளவு அகலமாகவும் போதிய உயரத்துடனும் அமைக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கையாக தெரிவித்து அதனை அனுமதிப்பதாக சபை ஏகமனதாக முடிவெடுத்தது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More