Home இலங்கை கொரோனா- “உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம்”

கொரோனா- “உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம்”

by admin

சமூக வலைத்தளங்கள், கையடக்கத்தொலைபேசி ஊடாக இலங்கையின் கொரோனா நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் பகிரப்படுகின்றன. இவ்வாறான நிலையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதால், பொறுப்பு வாய்ந்த துறையினரால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என  வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தி உள்ளார்.

இலங்கை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

மக்களின் சில ஊகங்களால் உண்மையான விடயங்கள் மறைக்கப்படக்கூடும் எனவும்,  இதன் காரணமாக இன்று (12.03.20) முதல் நாளாந்தம் ஊடக அறிக்கையை வௌியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளியின் மகனுக்கும் Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது. குறித்த நோயாளியின் குடும்பத்தினரால் பாரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் அதனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே கண்காணிக்கப்படுவதாகவும், குறிப்பாக  குடும்பத்தினருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவரின் மகன், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயில்வதால் இன்று காலை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More