Home இலங்கை சில பகுதிகளில் காவல்துறை ஊரடங்கு :

சில பகுதிகளில் காவல்துறை ஊரடங்கு :

by admin


புத்தளம் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 4.30 மணிமுதல் மீள் அறிவித்தல் வரை காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் உள்ள 11 காவல்துறைப் பிரிவுகளிலும் சிலாபத்தில் உள்ள 7 காவல்துறைப் பிரிவுகளிலும் இவ்வாறு ஊடரங்கு சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாபம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மாரவில, மாதம்பை, கொஸ்வத்த, தங்கொட்டுவ, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ ஆகிய காவல்துறைப் பகுதிகளில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

அத்துடன், புத்தளம் காவல்துறைப் பிரிவில், முந்தல், உடப்பு, கற்பிட்டி, நவகத்தேகம, பள்ளம, களுகரகஸ்வௌ, ஆனைமடு, வனாத்தவில்லுவ, சாலியவௌ, நவகத்தேகம ஆகிய பகுதிகளில் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு, கொச்சிக்கடை காவல்துறை பிரிவுகளிலும் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  #ஊரடங்கு   #அஜித்ரோஹண #கொரோனா #புத்தளம்  #சிலாபம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More