Home இலங்கை யாழ்.போதனா வைத்தியசாலையில் உணவு நெருக்கடி – எயிட் அமைப்பினர் உதவி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் உணவு நெருக்கடி – எயிட் அமைப்பினர் உதவி..

by admin

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்களது நிலை தொடரும் ஊரடங்கு காரணமாக நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது.

அதிலும் யாழிற்கு வெளியிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்களிற்கு இன்றைய ஊரடங்கு மத்தியில் வைத்தியசாலை நிர்வாகம் உணவினை வழங்கிய போதும் அவர்களிற்கு உதவியாளர்களாக நிற்பவர்களது நிலை பரிதாபத்திற்குரியதாகியிருந்தது.

நகரிலுள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் ஒரு வேளை உணவுக்காக அவர்கள் திண்டாடியமை தொடர்பில் ஊடகவியலாளர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை யாழ்.எய்ட் மனித நேய உதவி அமைப்பின் கவனத்திற்கு யாழ்.ஊடக அமையம் கொண்டு சென்றிருந்தது.

உடனடியாக விரைந்து செயற்பட்ட யாழ்.எயிட் அமைப்பினர் சமைத்த உணவு பொதிகளை இன்றைய இரவுவேளை ஊரடங்கு மத்தியிலும் ஊடகவியலாளர்கள் சகிதம் எடுத்து சென்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளார். நாளைய தினம் மதியம் மற்றும் இரவு உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More