Home இலங்கை பத்தனை டெவோன் வனப்பகுதியில் பாரிய  தீப்பரவல் –   5 ஏக்கர்   தீக்கிரை

பத்தனை டெவோன் வனப்பகுதியில் பாரிய  தீப்பரவல் –   5 ஏக்கர்   தீக்கிரை

by admin

(க.கிஷாந்தன்)

திம்புள்ள – பத்தனை டெவோன் வனப்பகுதியில் இன்று (24.03.2020) மாலை ஏற்பட்ட பாரிய தீப்பரவல் காரணமாக  5 ஏக்கர் தீக்கிரையாகியுள்ளது. குறித்த வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வருவதால் மேலும் பல ஏக்கர் எரிந்து நாசமாகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டுள்ள வனத்தின் மேல்பகுதியிலேயே டெவோன் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. அத்துடன், கடும் வறட்சியும் நிலவி வருவதால் நீர்வீழ்ச்சியின் ரம்மியமான காட்சியை காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உஷ்ணமான காலநிலையால் இத்தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், மனித செயற்பாடு உள்ளதா என்ற கோணத்தில்  காவல்துறை விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

காவல்துறையினரும், பத்தனை பிரதேச மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  #பத்தனை  #டெவோன்  #வனப்பகுதி  #தீப்பரவல்  #தீக்கிரை

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More