Home உலகம் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது

by admin

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்குச்சட்டம் போட்டு மக்களை முடக்குவது மட்டுமே போதாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வரும் கொரோனா வைரஸினால் உலகம் முழுவதிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ர்ள்ளனர். மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் வைரசை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது.  எனினும் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே ப போதாது என   தராது உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கப்ரியசஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தை குறைக்கும். வைரசை அழிக்க இந்த நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல.

கொரோனா வைரசை ஒழிக்க இந்த நேரத்தை பயன்படுத்த அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். சுகாதாரப் பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு பரிசோதிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் வருகிறது என்பதை கண்டறிய தெளிவான திட்டம் தேவை என அவர் தெரிவித்துள்ளார்  #கொரோனா  #ஊரடங்கு  #உலகசுகாதாரஅமைப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More