Home இலங்கை மேலும் ஒரு வாரம் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாக பிரகடனம்

மேலும் ஒரு வாரம் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாக பிரகடனம்

by admin

கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை பலப்படுத்துவதற்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 03 வரை வீடுகளில் இருந்து வேலைசெய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர்ந்த அனைத்து அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இது ஏற்புடையதாகும்.

இக்காலப்பகுதி அரச விடுமுறை நாட்களாக கருதப்படமாட்டாது. மக்கள் சேவையை தொடர்ச்சியாக பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சுய நோய்த் தடுப்புக் காப்புக்கு இடமளிப்பது இதன் நோக்கமாகும்.

மார்ச் 20 முதல் 27 வரையான காலப்பகுதி வீட்டிலிருந்து வேலைசெய்யும் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நடைமுறையை குறித்த காலப்பகுதியிலும் தொடர்ந்தும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   வீட்டிலிருந்து #பிரகடனம் #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More