Home இலங்கை கொரோனா – இத்தாலி குறித்து இலங்கை ஊடகங்களில் வெளிவந்த தகவல்களுக்கு மறுப்பு…

கொரோனா – இத்தாலி குறித்து இலங்கை ஊடகங்களில் வெளிவந்த தகவல்களுக்கு மறுப்பு…

by admin

இத்தாலியின் கோவிட் – 19 நிலைமை குறித்து இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் தொடர்பாக  இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலி குடியரசின் தூதரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இத்தாலியின் கோவிட் – 19 நிலைமை குறித்து இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் தொடர்பாக இத்தாலிய தூதரகம் தெளிவுபடுத்த விரும்புகிறது.

“இத்தாலியின் ஒரு சில பகுதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும், இத்தாலி மக்கள் நிர்வாணமாகவும், மதச் சடங்குகள் இல்லாமலும் புதைக்கப்படுகின்றனர் என்றும் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது ஆகும். இறுதிச்சடங்குகளில் பொது மக்கள் கலந்து கொள்ள இடமளிக்கவில்லை என்பது உண்மையாகினும், குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அனபுக்குரியவர்கள் என மிகவும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலானவர்களுடன் மதகுருவின்  முன்னிலையில் இறுதிச் சடங்குகளும்  நல்லடக்கமும் அடம்பெற்றன.

இறந்த ஒவ்வொரு உடலும் (ஒரு சவப்பெட்டியில் அல்லது ஒரு சில சமயங்களில் அவரது சாம்பல்) தனித்தனியாக பேணப்பட்டு,  அனைத்து மரியாதையுடனும் விரும்பிய மதச்சடங்குகளுடனும்,  சட்டங்களுக்கமைவாகவும் இறந்தவர்களுக்கு  மிகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.

இது இத்தாலி கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு வழக்கமாகும். அண்மைக்கால செய்தி வெளியீடுகளில் குறிப்பிடப்பட்ட, இத்தாலியிலிருந்து திரும்பி வந்தவர்கள் இந்த தூதரகத்திலிருந்து விசாவினைப் பெற்றுக்கொள்ளவில்லை அல்லது கோரவில்லை என்பதனை நாம் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம். அதே சமயம் எமது இலங்கை நண்பர்கள் பலரும் எமக்களித்த ஏராளமான ஆதரவுக்கு எமது மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என இத்ததாலிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More