Home இலங்கை யாழ்ப்பாணத்தில் 37 பேர்   கைது

யாழ்ப்பாணத்தில் 37 பேர்   கைது

by admin

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் நகரில் இன்று திங்கட்கிழமை மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.

இதனால் முற்பகல் 10 மணியளவில் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வந்திறங்கிய யாழ்ப்பாணம் தலைமையக காவல்த] நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான  காவல்துறையினர் வீதித் தடையை ஏற்படுத்தி வாகனங்களில் செல்வோரிடம் விசாரணை நடத்தினர்.

இதன்போது, மருந்தகங்களுக்கு செல்வதற்கான மருத்துவரின் சிட்டை காண்பித்தவர்களும் அத்தியாவசிய சேவைகளுக்கான அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். காரணமின்றி பயணித்தவர்களை  காவல்துறையினர் தடுத்துவைத்துள்ளனர்.    #யாழ்ப்பாணம் #தடுத்து  #ஊரடங்கு  #கைது

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More