Home இலங்கை மதுபானசாலையை உடைத்து பெறுமதியான  பல  மதுபான போத்தல்கள் கொள்ளை

மதுபானசாலையை உடைத்து பெறுமதியான  பல  மதுபான போத்தல்கள் கொள்ளை

by admin

(க.கிஷாந்தன்)

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் திம்புள்ள பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை  காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(10.04.2020) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . இன்று அதிகாலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை ரொசிட்டா நகரில் உள்ள மதுபானசாலையின் முன் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்ட அப் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மதுபானசாலை உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  #மதுபானசாலை  #கொள்ளை  #ஊரடங்கு

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More