Home இலக்கியம் உயிர்த்த ஞாயிறு-2020 – நிலாந்தன்…

உயிர்த்த ஞாயிறு-2020 – நிலாந்தன்…

by admin

உயித்தெழுந்தபோது
கிறீஸ்து
முரட்டுத் துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார்
தோமஸ்
திருக்காயங்களைச் சோதிக்க முன்னும் பின்னும்
கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான்

பூமியின் பாரம் குறையலானது
நாடு
முதியவர்களை
நாய்களைப்போலசாகவிட்டது
சைரனும் சேமக்காலை மணியும்
ஒலிக்காதபொழுதுகளில்
இத்தாலியர்கள்
ஆளரவமற்ற தெருக்களை
இசையால் நிரப்பினார்கள்.

கள்ளத் தீர்க்கதரிசிகள்
ஓடியொளித்தகால மொன்றில்
மருத்துவர்களே
சமூகத்தின் பேச்சாளர்களாக மாறினார்கள்

காற்றைப் பட்டங்கள் கைப்பற்றின
கடலை மீனினங்கள் கைப்பற்றின
வானத்தைப் பறவைகள் கைப்பற்றின
ஜலந்தரின்
மாசற்றவானில்
இமயமலை
ஒருநிலக்காட்சி ஓவியம் போல படர்ந்து கிடந்தது

கிறீஸ்து
மாஸ்க் இல்லாமல்
உயிர்த்தெழும் காலமொன்றுக்காக
பூத்திருக்குமாம்
கொன்றைமரம்

Spread the love
 
 
      

Related News

1 comment

ம.கருணா April 13, 2020 - 2:17 am

கவிதை அருமை…
இயேசு உயிர்த்தெழுந்த ஒவ்வொரு காலத்திலும் இயற்கைச் சீற்றங்களும்
இன அழிப்புகளும்
நோய்மைகளும் நம் வாழ்வில் சூழ்ந்த ரணங்கள்…
நிலவுகின்ற கட்டுமானங்களைக் கட்டுடைக்கின்றது கவிதை…

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More