Home இந்தியா கொரோனா – இந்தியாவில் 24 மணி நேரத்தில் 31 பேர் பலி – உயிரிழப்பு 273 ஆக அதிகரிப்பு

கொரோனா – இந்தியாவில் 24 மணி நேரத்தில் 31 பேர் பலி – உயிரிழப்பு 273 ஆக அதிகரிப்பு

by admin


இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.  ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 918 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,447 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட வார்ட்டுகளாக 20 ஆயிரம் புகையிரத பெட்டிகள் மாற்றப்பட உள்ளதாகவும் கொரோனா பரவும் வேகம் அதிகரித்தால் அதை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  #கொரோனா   #இந்தியா  #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More